கவிதை 01:
நான் அவளிடம் ஒரு வார்த்தையாவது பேச நினைத்தேன்..,
ஆனால்;
அவள் மட்டும் அல்ல அவள் கொலுசும் கூட “செல்
செல்” என்கிறது என்னை..!!!
கவிதை 02:
காலமெல்லாம் அவளுக்காக காத்திருப்பேன்..!!என் காதல் கைகூடும் என்ற நம்பிக்கையில் அல்ல;என்றாவது ஒருநாள் அவள் கண்கள் என்னை தேடும் என்ற நம்பிக்கையில்..!!
கவிதை 03:
என் நினைவோடு அவள் இருந்தால்..,
உயிரோடு நான் இருப்பேன்..!!
என்னை மறக்காமல் அவள் இருந்தால்..,
மறுபிறவியும் நான் எடுப்பேன்..!!!
என்றென்றும் அவள் அன்புக்காக….!!!!
கவிதை 04:
அழகை கூட ரசிக்க தெரியாத மனம் எனக்கு..!!ஆனால்;அழுகையை கூட ரசிக்க கற்றுக் கொண்டேன்..,அவளை காதலித்த பின்பு..!!
கவிதை 05:
ஒரு பெண்ணை உண்மையாக நேசித்து பார்..!
உன் அருகில் ஆயிரம் பெண்கள் இருந்தாலும்..,
உன் மனம் காதலியை மட்டும் தான் தேடும்..!!!!
கவிதை 06:
ஆயுள் முழுவதும் அவளுக்காக காத்திருக்க நான் தயார்..!மரணம் போல அவளும் நிச்சயமாய் வருவாள் என்றால்..!!
கவிதை 07:
சிறிது தூரம் நடக்கவே சலித்துக் கொண்ட நான்;
இன்று வெகு தூரம் நடக்கிறேன்..!!
விடை தெரியாமல், அவள் பின்னால்..!
கவிதை 08:
யாருக்கும் தெரியாமல் நீ அவளை நேசி..!!ஒரு நிமிடமாவது..,அவளுக்கும் தெரியாமல் உன்னை நேசிப்பாள்..!!!
கவிதை 09:
ஒரு வார்த்தையில் உயிர் வாழ்வதும்..,
ஒரு வார்த்தைக்காக உயிர் விடுவதும்..,
காதலில் மட்டும்தான்..!!
கவிதை 10:
அவள் படிக்கும் புத்தகத்தில், எழுத்துக்களாக பிறக்க ஆசை..!அப்போதாவது அவள் பார்வை என் மீது பட்டு,அவள் உதடுகள் என்னை உச்சரிக்கும் என்று..!!
கவிதை 11:
எனக்கு மட்டுமே சொந்தம் என்று எதையும் நான் நினைத்தது இல்லை..!
அவளை பார்க்கும் வரை..!!
கவிதை 12:
பார்க்காத பொழுது இதயம் பேச துடிக்கும்..!ஆனால்;பார்க்கும் பொழுது இதழ்கள் பேச மறுக்கும்..!!உண்மையான காதலில்..!!!