தாவணி கவிதைகள்


கவிதை 1:



ஆசையாய் தாவணி
அணிய
  சொல்கிறாய்..!
அழகாய் வந்து நின்றால்..,
அணியாத இடங்களையே..,
அழகென்று பார்க்கிறாய்...
உன்னையா
  நம்புவது...?


கவிதை 02

உன் தாவணிகள்
ஏன் இவ்வளவு அழகாயிருக்கிறது தெரியுமா..?
நீ எந்த வண்ணத்தில் உடுத்திருந்தாலும்..,
நீ பூசுகிற வெட்கத்தின் வண்ணத்தை,
அணிந்து கொள்கின்றன..!!
உன் தாவணிகள்..!!!

கவிதை 03


இறுகக் கட்டியிருக்கிறாய் என்பதால் மடடுமல்ல..!
உன்னை கட்டியிருக்கிறோம்
என்கிற கர்வத்தில்..,
அழகாயிருக்கிறது உன் தாவணி...


கவிதை 04

பாவாடை தாவணியில் வெளியே வரும்பொழுதில்..,
அவிழ்ந்து விடுமோ என்று பயப்படுகிறாயா..?
கவலைடாதே..,
உன்னை தழுவுகிற சுகத்தை விட்டு..,
அவை நழுவி விடாது...

கவிதை 04

உன்னைத் தீண்ட முடியாத கோபத்தில்..,
காற்று தாவணியோடு மல்லுக்கட்டுவதைப் பார்த்து..,
புன்னகைக்கிறது உன் கூந்தல் பூக்கள்..!!
அவையிரண்டையும் பார்க்கையில் தவிக்கும் என்னைப்பார்த்து..,
குறும்பாக சிரிக்கிறது..,
என் காதல்...
கவிதை 05

காற்றில் அசைகின்ற தாவணிக்கு..,
அப்படி என்ன மயக்கமோ..!!
ஒரு வேளை உன்னை தழுவிக்கொண்ட மயக்கம் தருகிற போதையோ..??
இப்படி தழைகிறது..!!!