கவிதை 01:
அவள் என்னை ரசிக்க என்னிடம்
அழகு இல்லை..!
என் இதயத்தை நேசிக்க அவளிடம்
இதயமே இல்லை..!!
கவிதை 02:
காற்றில் கூட அவள் இருக்கிறாள் என்பதை உணர்கிறேன்..!தூசியாய் வந்து என் கண்ணை கலங்க வைத்த போது..!!
கவிதை 03:
பெண்ணே..!
மீண்டும் ஒருமுறை என்னை திரும்பி
பார்க்காதே..;
இழப்பதற்கு என்னிடம் இல்லை..,
இன்னொரு இதயம்..!!!
கவிதை 04:
அன்பே..!உன்னை போல எனக்கும் கற்றுக் கொடு..;நம்பியவரை ஏமாற்றுவதற்கு...இனியாவது ஏமாறாமல் இருப்பேன்..!
கவிதை 05:
அவள் என் கண்களுக்குள் வந்துகொண்டுதான்
இருக்கிறாள்..!
கனவுகளாக அல்ல..;
கண்ணீராக..!!
கவிதை 06:
மலரே..!நீயும் நானும் ஒரே ஜாதி தான்..!!ஏன் என்றால்..;உன்னையும் என்னையும் வாட வைப்பது..,ஒரு பெண் தான்..!!!
கவிதை 07:
நான் தூங்கி பல நாட்கள் ஆகி
விட்டது..!
காரணம்;
அவள் சொன்ன வார்த்தை..!!
“கனவிலும் என்னை நினைக்காதே
என்று”..!!!
கவிதை 08:
உண்மையான காதலை உணர வைப்பதும் பெண்தான்..!உணர்ந்த காதலை வெருக்க வைப்பதும் பெண்தான்..!!
கவிதை 09:
பெண்ணே..!
நீ அழகாய் இருப்பதால் தான் உன்னை
காதலிக்கிறேன் என்று கர்வம் கொள்ளாதே..!
உன்னை அழகாக்கியதே..,
என் காதல் தான்..!!
Social Plugin