ஆசைதான்
அதிகமானால்..,
அங்கம்தான்
புனிதமாகும்..!
தேகங்களின்
கூடலிலே..,
மோகத்தால்
மூச்சடைக்கும்..!!
ஆடையே பாரமாக..,
அச்சமோ
தூரம் போக..!
அணைத்தவளே
ஆடையாக..,
அவள் இதழ்
என்னை ஈரமாக்க..!!
ஐந்தடி
உடல் மூலம்..,
அகிலத்தை
ரசித்தேன்..!
அழகிய இதழ்களிலே..,
அமுதத்தை
ருசித்தேன்..!!
நீ தொடத்தான்
நான் பிறந்தேன்..!
நான் தொடத்தான்
நீ பிறந்தாய்..!!
நாம் தொட்டால்..,
யார் பிறப்பார்..?