தனிமை


கவிதை 01:
 
அன்பின் ஆழம் எவ்வளவு என்பதை..,
பிரிவின் போதுதான் உணர முடியும்..!!
அதை உணர்கிறேன்..;
அவளை சந்திக்காமல் இருக்கும் இந்த நிமிடங்களில்..!!!

கவிதை 02:

உயிர் பிரிவதை யாரும் பார்த்தது இல்லை...
ஆனால்;
என் உயிர் பிரிவதை நான் பார்த்தேன்...!
என்னவள் என்னை விட்டு பிரிந்த போது..!!

கவிதை 03:

அவளை விட்டு பிரியும் போதெல்லாமல்..,
நான் தனியே பேசிகொள்கிறேன்..!
என் நிழலுடன் அல்ல..;
அவள் நினைவுகளுடன்..!!

கவிதை 04:

கனவை சுமக்கும் கண்கள் தான் கண்ணீரையும் சுமக்கிறது...
ஆனால்;
அவள் அன்பை சுமக்கும் என் இதயம் மட்டும்..,
அவள் பிரிவை சுமக்க மறுக்கிறது..!!!