கவிதை 01:
அன்பின்
ஆழம் எவ்வளவு என்பதை..,
பிரிவின்
போதுதான் உணர முடியும்..!!
அதை உணர்கிறேன்..;
அவளை சந்திக்காமல்
இருக்கும் இந்த நிமிடங்களில்..!!!
கவிதை 02:
உயிர் பிரிவதை யாரும் பார்த்தது இல்லை...ஆனால்;என் உயிர் பிரிவதை நான் பார்த்தேன்...!என்னவள் என்னை விட்டு பிரிந்த போது..!!
கவிதை 03:
அவளை விட்டு
பிரியும் போதெல்லாமல்..,
நான் தனியே
பேசிகொள்கிறேன்..!
என் நிழலுடன்
அல்ல..;
அவள் நினைவுகளுடன்..!!
கவிதை 04:
கனவை சுமக்கும் கண்கள் தான் கண்ணீரையும் சுமக்கிறது...ஆனால்;அவள் அன்பை சுமக்கும் என் இதயம் மட்டும்..,அவள் பிரிவை சுமக்க மறுக்கிறது..!!!
Social Plugin