அரைகுறையாக
ஒரு சிறு பார்வை..,
வாய்திறக்காமல்
ஒரு சிறு மௌனம்..,
உதடசையாமல்
ஒரு புன்சிரிப்பு..,
கண் இமைத்து
ஒரு சிறு கேள்வி..,
தலைகுனிந்து
ஒரு சிறு வெட்கம்..,
இதுமட்டும்
போதும் அன்பே..!!
தொலைவில்
நின்று சந்தித்துக் கொண்டாலும்..,
நம் காதலை
அனுபவிக்க..!!!