தேவதை கவிதைகள் - (1 - 10)

 
தேவதை கவிதைகள், S.Ilayaraja Oil Painting

01. அழகு சிலை:

கோவிலில் அழகு சிலைகள் அனைத்தும் அசையாமல் இருக்க.., 
ஒரு சிலை மட்டும் நகர கண்டேன்..!
அவள் கோவிலை சுற்றிவரும் போது..!! 💞
 

02. அவள் கூந்தலின் அழகு:

தற்கொலை செய்துகொள்ள ஏங்குகிறது என் மனம்..!
அவள் பின்னிய கூந்தலை கயிராக சுருட்டும் போது..!! 💟
 

03. நிலவுலகின் பேரழகி:

அன்பே..!!
வெளிவந்து விடாதே பௌர்ணமி அன்று..! 🌕
அந்த நிலவு கூட நிலை குலைந்து விடும்..!!
நிலவுலகில் இப்படி ஒரு அழகியா என்று வியந்து..!!! 😍
 

04. புதிதாக உணரும் காதல்:

காதலர் தினம் என்றும் புதியது இல்லை..
ஆனால்..,
ஒவ்வொரு முறையும் புதியதாய் உணர வைக்கிறாள்..;
என் அழகிய தேவதை..!!
அவள் காதலை..!! 💖
 

05. உதடுகள்:

அவள் மௌனம் கூட அழகுதான்..!
காரணம்;
அதிலும் ஒரு இணைபிரியாத காதல் ஜோடி..!!
அவள் உதடுகள்..!! 👄
 

06. வாடிவிடும் ரோஜா:

நாளை பூக்கும் ரோஜாவிடம் சொன்னேன்..! 🌹
என் தேவதை வரும் முன்பு நீ மலர்ந்துவிடாதே என்று..!!
ஏனென்றால்,
அவள் அழகை பார்த்து அழகிய ரோஜா வாடிவிடும் என்பதால்..!!! 🥀

08. கண்கள் பேசும் மொழி:

பேசாமல் இருந்தேன்..,
நீ பேசுவாய் என்று நினைத்து..! 🙇‍♂️
பேசாமலே சென்று விட்டாய்..,
நான் பேசுவேன் என்று நினைத்து..!! 🙇‍♀️
ஆனால்;
உன் உதடுகள் பேச வேண்டிய வார்த்தைகளை..,
உன் கண்கள் பேசிவிட்டது..!! 👁

09. மௌனமாய் உன் இதழ்கள்:

பேசாமல் என்னை கொல்கிறது.., உன் உதடுகள்..!! 👄
பேசியே என்னை கொல்கிறது.., உனது விழிகள்..!! 👀
 

10. கனவில் உன் தரிசனம்:

கல்லூரியிலும் தூங்கிவிடுகிறேன்..!! 😴
கனவில் மட்டும்,
உன் தரிசனம் என்பதால்..!! 🙈